விலையை உயர்த்தியது தமிழக அரசு - 100 ரூபாயில் இருந்து 125 ஆக உயர்வு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c2f622cb4558d6896f592ed1c989491b.jpg?width=836&height=470&resizemode=4)
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, காப்பீடு தொகை வழங்குவதற்காக, காப்பீடு நிறுவனங்கள், விபத்து தொடர்பான ஆவணங்களை, காவல் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன.
இதற்கு காவல்துறை சார்பில், 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை, உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஆவணத்துக்கான பதிவிறக்கக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா வெளியிட்ட உத்தரவு.
அதில், அரசு கணக்கில் ரூ.12.50ம், குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு வலையமைப்பு சேவைகள் நிதியத்துக்கு ரூ.112-ம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.