1. Home
  2. தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் - தமிழக ஆளுநர் அதிரடி!

1

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேர முடியும். இந்த நிலையில், நீட் தேர்வு ஏழை, எளிய மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கடினமாக இருப்பதாக கூறி தமிழக அரசு அதனை எதிர்த்து வருகிறது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதேபோல் சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

இந்த நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற 'எண்ணித் துணிக' நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து ஒருபோதும் விலக்கு அளிக்க முடியாது. நீட் தேர்வு தேவை என்பதில் நான் எப்போதும் உறுதியாக இருப்பேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும். இவ்வாறு கூறினார். 

Trending News

Latest News

You May Like