1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..! பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய இது போதும்..!

1

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மேம்பட பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி உள்ளது. கல்வியில், வேலையில் இடஒதுக்கீடு, மாதந்தோறும் உதவித்தொகை, பேருந்துகளில் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சர்க்கரை நாற்காலிகளில் செல்ல ஏதுவாக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய வசதியாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அது தவிர மற்றொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது பழைய பயண அட்டையை காட்டி பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் உள்ளதாவது: "மாற்றுத் திறனாளிகள், சுதந்திரபோராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டையை இணையதளம் வாயிலாக வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக மாநகர பேருந்துகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கான வசதியை கடந்த ஆண்டு செப்.7-ம் தேதிசென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பயண அட்டையை இணையதளம் வாயிலாக மாற்றுத் திறனாளிகள் பெறும் வரை, கடந்த மாதம் (மார்ச்) 31-ம்தேதி வரை செல்லத்தக்க பயணஅட்டை வைத்திருப்பவர்களை ஜூன் 30-ம் தேதி வரை பயணம்செய்ய அனுமதிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல், இணையதளம் வாயிலாக பெறப்பட்ட பயண அட்டை வைத்திருப்பவர்களையும் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அனைத்து நடத்துநர்களும் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு, எவ்வித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like