1. Home
  2. தமிழ்நாடு

கூடுதல் எஸ்.பி.க்கள் 4 பேர் எஸ்.பி.க்களாகப் பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு!

1

கூடுதல் எஸ்.பி.க்கள் நான்கு பேரை எஸ்.பி.க்களாகப் பதவி உயர்வு வழங்கி, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ.எஸ்.பி. ரவிச்சந்திரன், திருச்சி நகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் காவலர் தேர்வுப் பள்ளி ஏ.எஸ்.பி. ரமேஷ் பாபு, துணை ஆணையராக (சென்னை ஐகோர்ட் பாதுகாப்பு) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் ஏ.எஸ்.பி. மலைச்சாமி, சென்னை அறிவுச்சார் சொத்துப் பிரிவின் அமலாக்கத்துறை எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சேலம் சைபர் குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி. செல்லபாண்டியன், ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like