1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசின் கலைச்செம்மல் விருதுகள் அறிவிப்பு..!

1

தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின், ஓவிய நுண்கலை குழு வழியாக, ஆண்டுக்கு ஆறு கலைஞர்களுக்கு, கலைச்செம்மல் விருது, தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்ய, தேர்வாளர்கூட்டம், கலைபண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், 2021 – 22 முதல் 2023 – 24 வரை, மூன்று ஆண்டுகளுக்கு 18 கலைஞர்களை தேர்வு செய்தனர்.

மரபுவழி ஓவியம் பிரிவில், ஓவியர் ராமு என்கிற ராமதாஸ், மணியம் செல்வன், ராஜமோகன், வாசுகி லட்சுமி நாராயணன், வேல்முருகன்; மரபுவழி சிற்பம் பிரிவில், செல்வநாதன், ராஜேந்திரன், உலோக சிற்பக்கலைஞர் ரவீந்திரன், மர சிற்பக்கலைஞர் பால்ராஜ்;

நவீன ஓவியம் பிரிவில் விஸ்வம், சுப்பிரமணியம், பிரபுராம், அருணகிரி, புகழேந்தி, அதிவீரராம பாண்டியன்; நவீன சிற்பம் பிரிவில் கருணாமூர்த்தி, விஜயவேலு, ஹேமலதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ, சென்னையின் பாரம்பரியமிக்க செவ்வியல் இசையின் சிறப்புகளுக்கு, பெருமை சேர்க்கும் வகையில், இசை நகரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like