தமிழக எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் காலமானார் ..!
தமிழ்நாடு அரசு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன். கொரோனா காலத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா சூழல் குறித்து பிரஸ்மீட்களை அளித்து வந்தவர் பீலா வெங்கடேசன்.
உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் உயிர் பிரிந்தது. தூத்துக்குடியை சேர்ந்த இவர் செங்கல்பட்டில் துணை ஆட்சியராக பணியை தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராகவும் இருந்தவர். கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.