5 பேர் உயிரிழப்பு- உயிரிழந்தோரின் குழந்தைகளின் படிப்பு செலவை தமிழக காங்கிரஸ் ஏற்கும்..!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியானதை நியாயப்படுத்த முடியாது.
* விமானப்படைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது. அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
* உச்சி வெயில் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
* இதுபோன்ற மரணங்கள் நடக்க தமிழக அரசு இனிமேல் வாய்ப்பு கொடுக்கக்கூடாது.
* விசாரணை ஆணையம் அமைத்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும்.
* உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
* உயிரிழந்தோரின் குழந்தைகளின் படிப்பு செலவை தமிழக காங்கிரஸ் ஏற்கும் என்று அவர் கூறினார்.