1. Home
  2. தமிழ்நாடு

வரும் 4-ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் - முதல்வர் ஸ்டாலின்..!

1

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது.  இதைத்தொடர்ந்து வருகிற 4-ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வின் பாசிச ஆட்சியை வீழ்த்த இன்னும் சில நாடுகளே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது இண்டியா கூட்டணியினர் விழுப்புடன் செயல்பட வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, 

பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. 

தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இண்டியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. 

வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வரும் 4-ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Trending News

Latest News

You May Like