1. Home
  2. தமிழ்நாடு

புதுக்குடி மக்களைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு..!

1

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் பேய் மழை பெய்தது. விடிய விடிய நாள் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்து மிரட்டியது. திருச்செந்தூரும் கனமழையால் வெள்ளக்காடானது.

திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் 'சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது. ஆனால் ரயில் லோகோ பைலட்டால் தண்டவாளத்தை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே ரயிலை ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்திவிட்டார். ரயில் நிலையத்தை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பயணிகள் வெளியேறத முடியாத நிலை இருந்தது .இதை கவனித்த அப்பகுதி மக்கள் உதவி செய்தனர்  ரயிலில் தவித்த பயணிகளுக்கு புதுக்குடி மேலூர் கிராம மக்கள் உணவு வழங்கினர்.

இந்நிலையில், புதுக்குடி மக்களைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு ரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், “THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS” என மகாத்மா காந்தி கூறியதை நினைவுபடுத்துகிறது. அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புஉணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்.


 

Trending News

Latest News

You May Like