1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்..!

1

 தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

திருச்சி, பெரம்பலூர் தொகுதியில் இன்று 22-ம் தேதி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து, 23-ம் தேதி (சனிக்கிழமை) தஞ்சை, நாகை தொகுதிகளிலும்,  25-ம் தேதி (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலியிலும், 26-ம்  தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரத்திலும், 27-ம் தேதி (புதன்கிழமை) தென்காசி, விருதுநகர் தொகுதியிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் 29-ம் தேதியும், 30-ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சியிலும், 31-ம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளிலும், ஏப்ரல் 2-ம்  தேதி வேலூர், அரக்கோணம் தொகுதிகளிலும், 3-ம் தேதி திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளிலும், 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர், விழுப்புரம் தொகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிகளில் 6-ம் தேதியும், 7-ம் தேதி புதுச்சேரியிலும், 9-ம்  தேதி மதுரை, சிவகங்கையிலும், 10-ம் தேதி தேனி, திண்டுக்கல் தொகுதிகளிலும், 12-ம் தேதி திருப்பூர், நீலகிரி தொகுதிகளிலும், 13-ம் தேதி (சனிக்கிழமை) கோவை, பொள்ளாச்சி தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார். 

திருவள்ளூர், வடசென்னை தொகுதிகளில் 15-ம் தேதியும், 16-ம் தேதி காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும், 17-ம் தேதி தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரச்சாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் தி.மு.க. தொண்டர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம் என கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் முதல்வரின்  வருகையை முன்னிட்டு திருச்சியில் அவர் பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று (வியாழக்கிழமை) முதல் நாளை 23-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும்  நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like