1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று வ.உ.சி திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..!

1

தமிழக அரசின் சார்பில்  இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், 05.09.2023 அன்று  காலை 10.15 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயனின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். 

டாக்டர் ப. சுப்பராயன், திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில்  ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். இவர் வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர். இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற எண்ணற்ற பதவிகளை வகித்து,  நல்ல திட்டங்களை தமிழக  மக்களுக்கு வழங்கினார். மேலும், சென்னை மாகாணத்தின்  முதல்வராகவும் டாக்டர் ப. சுப்பராயன் பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில், முதல்முறையாக அரசாங்க பணிகளில் தலித்துக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் வகுப்புவாரி பிரநிதித்துவ அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை - பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 05.09.1872-ல் மகனாகப் பிறந்த வ.உ.சி, தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர்.  ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை. அடியோடு ஒழித்திட சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.

நம் தேசத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும். தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சிகளில்,   அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.  

Trending News

Latest News

You May Like