1. Home
  2. தமிழ்நாடு

தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்..!

1

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.திட்டத்தின் நோக்கம் குறித்து விவரித்து பேசினார். மக்களின் புகார்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் மக்கள் நன்றி தெரிவித்து எழுதும் கடிதங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் அந்த மாவட்டத்திற்கான சிறப்பு திட்டங்களையும் அறிவித்தார்.

  • 51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • தருமபுரி - வெண்ணம்பட்டி சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  • மோபிரிபட்டி, தொட்டம் பட்டியை இணைத்து அரூர் பேரூராட்சி அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
  • பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படும்.
  • சிட்லிங், அரசநத்தம் பகுதிகளில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, வரகு, சாமை ஆகியவற்றை மதிப்புகூட்டு பொருளாக்க கிடங்கு மற்றும் பொது செயலாக்க மையம் அமைக்கப்படும்.
  • தீர்த்த மலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.
  • பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.


 

Trending News

Latest News

You May Like