30000 கோடி வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் - அதிமுக முன்னாள் அமைச்சர்..!

மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கேசி கருப்பண்ணன் பேசியதாவது, அதிமுக திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டு, தமிழக மக்களின் வாழ்க்கையை முதலமைச்சர் ஸ்டாலின் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டதாக தெரிவித்தார்.
தாலிக்கான தங்கத்தை நிறுத்திய முதலமைச்சர் இந்த ஸ்டாலின்.. தாலிக்கு தங்கம்.. அதைப்போய் நிறுத்தலாமா? மக்கள் என்ன உங்களை போல் 5000 பவுன் 2000 பவுன் நகைகளா வைத்துள்ளார்கள்? அரைப்பவுன், ஒரு பவுன் அம்மா கொடுக்கும் தங்கம்தான் அதையும் நிறுத்திவிட்டார்கள்.. கல்யாண ஊக்கத்தொகை ஐம்பதாயிரம் ரூபாயை நிறுத்தி விட்டார்..
தங்கத்தை நிறுத்தியவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின். கல்யாண உதவி தொகை 50,000 ரூபாய், அம்மாவின் காப்பீடு திட்டம், மாரடைப்பு ஏற்பட்டால் கூட உடனே சேர்ந்து 5 லட்சம் ரூபாய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.. அதை நிறுத்தி விட்டார்.. நம் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட லேப்டாப்.. கர்ப்பிணி பெண்களுக்கு எத்தனை உதவிகளை செய்தார்.. பெண்களின் பிரசவ வலி பெண்களுக்கு தான் தெரியும் என்பதை அறிந்த அம்மா.. கர்ப்பிணி பெண்களுக்கு அத்தனை உதவி திட்டங்களை அறிவித்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் பணம், பிறந்த குழந்தைகளுக்கு சோப்பு, பிரஷ் என அனைத்து பொருட்களும் கொடுத்தவர் அம்மா. ஸ்டாலின் ஏதாவது கொடுத்துள்ளாரா? அல்லது எந்த திட்டங்களையாவது விட்டு வைத்துள்ளாரா? அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டார். ஸ்டாலின் இன்று அம்மாவின் திட்டங்களை மட்டும் விடவில்லை, மக்களின் வாழ்க்கையே குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிறுத்தி விட்டீர்கள்.
50% மானியத்தில் ஆடு கொடுக்கும் திட்டம், கோழி கொடுக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டீர்கள். எடப்பாடி பழனிசாமியும் அம்மாவும் ஆண்டுக்கு 35000 கோடி ரூபாய்க்கு திட்டம் கொடுத்தார்கள். இந்த ஸ்டாலின் வெறும் 5 ஆயிரம் கோடிக்கு மட்டுமே திட்டங்களை கொடுக்கிறார். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என ஒரு கால்வாசி பேருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். ஓஏபி பணம் வாங்கியவர்களுக்கு கூட இன்று ஆயிரம் ரூபாய் பணம் கிடையாது.
மாதம் ஆயிரம் ரூபாய் என 12 மாதத்திற்கு 12000 என வருடத்திற்கு 3000 கோடியை கொடுத்துவிட்டு 5 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை மட்டுமே கொடுத்து மீதி 30000 கோடியை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதுதான் திமுக. அவர்களின் இந்த கொள்ளை விரைவில் வெளிச்சத்திற்கு வரும். இது மட்டும் நஷ்டம் அல்ல. 90 ரூபாய்க்கு விற்ற பிராந்தி இன்று 150 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு குவாட்டர் வாங்கி குடித்தால் மாதத்திற்கு 4500 செலவாகும்.
கரண்ட் பில் கட்டாத குடும்பங்கள் கூட இன்று 300 ரூபாய், 400 ரூபாய் கரண்ட் பில் கட்டுகிறது. ஒரு பை அரிசி 1700 ரூபாய். எடப்பாடியார் ஆட்சியில் 700 ரூபாய் விற்கப்பட்டது. இன்று ஆயிரம் ரூபாய் நஷ்டம். வீட்டு வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. 5000 ரூபாய் வீட்டு வரி கட்டியவர்கள் என்று 15 ஆயிரம் ரூபாய் கட்டுகிறார்கள்.. இதான் ஸ்டாலின் ஆட்சியின் லட்சம் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன்.