1. Home
  2. தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி ஜோசியராகவே மாறியுள்ளார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

1

சென்னை, தேனாம்பேட்டையில் நடந்த, கட்சி நிர்வாகி திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க., ஏராளமான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க., என்றும் மக்கள் பணியில் இருக்கும். எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை. கொள்கைக்காக அமைக்கப்பட்டது. தி.மு.க., கொள்கை கூட்டணி. தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்வதால் இ.பி.எஸ்., பொறாமையில் பேசுகிறார்.

பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்கள். அதுபோல் இ.பி.எஸ்., காத்துக் கொண்டிருக்கிறார். தனது கட்சியை வளர்க்க முடியாதவர் அடுத்த கட்சியின் கூட்டணி உடையாதா என காத்திருக்கிறார். தி.மு.க., கூட்டணி உடையப்போகிறது என்கிறார் இ.பி.எஸ்; அவர் கற்பனையில் இருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போது ஜோதிடர் ஆக மாறினார் என தெரியவில்லை. அவர் மக்களால் ஓரங்கட்டப்பட்டவர்.

தி.மு.க., கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம்.ஆனால் விரிசல் ஏற்படாது. தி.மு.க., கூட்டணி கொள்கை கூட்டணி. மக்கள் கூட்டணியாகவும் உள்ளது. மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை தொடர்ந்து தி.மு.க., அரசு எடுத்து வருகிறது. மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர் தான் இ.பி.எஸ்.,.
 

ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க இ.பி.எஸ்., வர மாட்டார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மட்டுமல்லாமல், அதற்கு பிறகு வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் தி.மு.க., கூட்டணி தான் வெல்லும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Trending News

Latest News

You May Like