1. Home
  2. தமிழ்நாடு

திமுக இளைஞரணியின் 2வது மாநாட்டை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

1

திமுகவின் இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “நான் வளர்ந்த, என்னை வளர்த்துவிட்ட, நான் உருவாக்கிய, என்னை உருவாக்கிய பாசறை தான் இளைஞர் அணி. அடக்கமாக, அமைதியாக, ஓய்வின்றி உழைக்கிறேன் என நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள் என்றால், அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது இளைஞர் அணிதான். தமிழ்நாட்டில் என் கால்படாத இடங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பயணம் செய்தேன். திமுகவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞர் அணி தான் அடித்தளம் அமைத்தது.

நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணமே இளைஞரணி தான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி இருப்பதால் தான் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். தற்போது இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றி கொள்ளுங்கள். அவர் பொறுப்புக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே அசைக்க முடியாத கோட்டையாக இளைஞர் அணியை கட்டி எழுப்பி வருகிறார்.

வலிமையான கொள்கை, உறுதியான பிடிப்பு, இனிமையான பரப்புரை, தொடர்ச்சியான உழைப்பு இவையனைத்தும் உதயநிதி ஸ்டாலினிடம் இயல்பாகவே இருப்பவை. கலைஞர் எங்கள் மீது வைத்த நம்பிகையை நாங்கள் காப்பாற்றியது போல, என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிப்படையாக செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். திமுகவில் இளைஞரணி என்ற ஒன்றை உருவாக்க கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் நினைத்தார்கள். ஏராளமான இளைஞர்கள் திமுகவுஇல் சேருவதால் அவர்களை வழி நடத்த வலிமையான இளைஞரணி வேண்டும் என்று நினைத்தார்கள். 1980ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. இந்தியாவ்லேயே ஓர் அரசியல் கட்சியில் இளைஞரணி தொடங்கப்பட்டது அதுவே முதல்முறை. இளைஞரணிக்கு சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டு 1981ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புடல் பெறப்பட்டது. 1983ம் ஆண்டு இளைஞரணியின் இரண்டாவது ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திமுக இளைஞரணிக்கு 5 பேர் கொண்ட அமைப்புக்குழு 1983ல் ஏற்படுத்தப்பட்டது. அதில் நானும் இடம்பெற்று இருந்தேன். அன்றில் இருந்துதான் இளைஞர் படையை வழிநடத்தும் பெரும் பொறுப்பு என்னிடம் சேர்ந்தது என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like