1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் 3-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்..!

1

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  வருகிற 3-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24- ம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது  3-ம் தேதி  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  

Trending News

Latest News

You May Like