1. Home
  2. தமிழ்நாடு

சாலைவிபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின்..!

1

தேவனாம்பட்டினத்தில் அரசு கல்லுாரி உள்ளது. நேற்று மதியம் கல்லுாரி முடிந்து 10க்கும் மேற்பட்ட மாணவியர்,  ஆட்டோவில் கடலுார் பஸ் நிலையம் வருவதற்காக வந்தனர். 

இந்நிலையில், தேவனாம்பட்டினம் பாலம் அருகே வந்தபோது, குறுக்கே ஓடிய நாய் மீது ஆட்டோ ஏறியதால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, ஆட்டோவில் சிக்கிய மாணவ, மாணவியரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மைக்ரோ பயாலேஜி மூன்றாம் ஆண்டு படித்த, பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் சரவணன் மகன் தமிழ்செல்வன்,19 உயிரிழந்தார். மேலும் மாணவிகள் 9 பேருக்கு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின்  குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் நிதியுதவி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட செய்தி குறிப்பில்,  கடலூர் வட்டம் தேவனாம்பட்டினம் கிராமம் கடற்கரை சாலையில் நேற்று (11-10-2023) மதியம் அப்பகுதியிலுள்ள கலைக்கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரி முடித்து ஷேர் ஆட்டோவில் கடலூருக்கு வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 'ஆட்டோ' கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பண்ருட்டி மட்டம் சிறுவத்தூர் ( மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்  த/பெ.சரவணன் (வயது 20) என்ற  மாணவர், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்

உயிரிழந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ம் இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

1

Trending News

Latest News

You May Like