1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி அரசியல்! எல்.முருகன் ஓரங்கட்டப்படுகிறாரா?

பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி அரசியல்! எல்.முருகன் ஓரங்கட்டப்படுகிறாரா?


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கொதிப்பில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல, பாஜக சார்பில் தேவர் நினைவிடத்திற்குள் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் சென்றனர். பின்னர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் அழைத்து வரப்பட்டுள்ளார்.

அப்போது, அஞ்சலி செலுத்திய தலைவர்களுக்கு துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யவது வழக்கம். அப்படித்தான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது.

பாஜக சார்பில் பங்கேற்ற எல்.முருகன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரில் யாருக்கு நன்றி மரியாதை செய்வது என்று திடீர் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது, ஹெஎச்.ராஜாவுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டதாகவும், இதனால், தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் உடனே திரும்பிச் செல்ல முயன்றதாகவும், இதைக் கவனித்த நயினார் நாகேந்திரன் அங்குள்ள பூசாரியிடம் ஒரு துண்டை வாங்கி, எல்.முருகன் கழுத்தில் போட்டு அவரை சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

தீயாய் பரவி வரும் இந்த சம்பவம் குறித்து உண்மை நிலையை மக்களுக்கும், மீடியாவுக்கும் விளக்க தமிழக பாஜக தலைவர்கள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like