1. Home
  2. தமிழ்நாடு

தாம்பரம்- நாகர்கோவில் ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு..!

1

 நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தாம்பரம்- நாகர்கோவில் ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படும். ஜூன் 2, 9, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 4.35 க்கு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கபடும் என தெரிவித்துள்ளது.

அதேபோல் ஜூன் 3, 10,17,24 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.40 க்கு நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like