T20 BREAKING : இந்திய அணி அபார வெற்றி..!

இன்று உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 இன் ஒரு பகுதியாக இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் ரன்கள் 205 எடுத்தது. இந்திய அணி சார்பில் ரோகித் ஷர்மா 41 பந்துகளில் 7 ஃபோர்கள், 8 சிக்ஸர்கள் விளாசி 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூரியகுமார் யாதவ் 31 ரன்கள், ஷிவம் துபே 28 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் மற்றும் ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.
இதை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.