1. Home
  2. தமிழ்நாடு

எஸ்.வி.சேகருக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு..!

1

சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாதம் சிறையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதனை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதித்த ஒருமாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.

2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அபராதத் தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like