1. Home
  2. தமிழ்நாடு

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை தான்! வெளியான தடயவியல் அறிக்கை!

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை தான்! வெளியான தடயவியல் அறிக்கை!


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்தின் காரணமாக நடந்த இது தற்கொலை அல்ல கொலை இது என சந்தேகங்கள் எழுப்பபட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த மரணம் சம்பந்தப்பட்ட மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உதவுமாறு எய்ம்ஸ் தடயவியல் துறையினரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தற்போது எய்ம்ஸ் தடயவியல் துறை நடத்திய விசாரணையின் பேரில் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான் எனவும், அவரது குடும்ப உறுப்பினர்களும், வழக்கறிஞர்களும் எழுப்பிய சந்தேகப்படி விஷம்அல்லது வேறு எந்த முறையிலும் கொலை செய்யப்படவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் மரணத்தில், அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை நடந்த விசாரணையில் கொலை செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அவரது தோழியும் நடிகையுமான ரியா மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. ரியாவின் சகோதரா், நடிகா் சுஷாந்தின் மேலாளா், வீட்டு உதவியாளா் உள்பட 9 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் சில பாலிவுட் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. என அதிகாரப் பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like