மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ் சொன்ன பள்ளிக் கல்வித் துறை!
டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கியது. அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் ஜனவரி) 2ஆம்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அரையாண்டு விடுமுறை நாட்களில் சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகாரை தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை கடும் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில் சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்து, அதற்கான சுற்றறிக்கை விடுவதும், அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்துவதும் தொடர் கதையாக மாறிவிட்டது.
பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறைக்கை சம்பிரதாய எச்சரிக்கையாக அமைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
முன்னதாக காலாண்டு, அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அந்த வகுப்புகளில் பங்கேற்றால் மட்டுமே பள்ளிகளில் தொடா்ந்து பயில முடியும் எனவும் தனியாா் பள்ளி ஒன்றின் சாா்பில் மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் பெற்றோா் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அப்போது, குறிப்பிட்ட தனியாா் பள்ளியின் தரப்பில் சிறப்பு வகுப்புகளுக்கு வருகை புரிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்க தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.