1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்! தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா நோய் தொற்று !

குட் நியூஸ்! தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா நோய் தொற்று !


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளுக்குநாள் கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 89 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 2 ஆயிரத்து 660 ஆண்கள் மற்றும் ஆயிரத்து 750 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 12 வயதுக்கு உட்பட்ட 34 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 239 முதியவர்களுக்கு நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குட் நியூஸ்! தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா நோய் தொற்று !

மேலும், மாவட்ட அளவில் புதிய நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் 395 பேர், சேலத்தில் 263 பேர் மற்றும் அரியலூரில் 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 148 பேர், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 84 லட்சத்து 29 ஆயிரத்து 741 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், நான்கு லட்சத்து 7 ஆயிரத்து 577 ஆண்களும், இரண்டு லட்சத்து 67 ஆயிரத்து 193 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். கொரோனா வைரஸ் நோய் தொற்றுவுக்கு அரசு மருத்துவமனையில் 27 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என மொத்தம் 49 பேர் நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதில், சென்னையில் 18 பேர், திருவள்ளூரில் 5 பேர், கோவை மற்றும் காஞ்சீபுரத்தில் தலா 3 பேர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் திருவண்ணாமலையில் தலா இரண்டு பேர், திருச்சி, சேலம், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, திருவாரூர், திருப்பூர், நீலகிரி மற்றும் வேலூரில் தலா ஒருவர் என மொத்தம் 19 மாவட்டங்களில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 5 ஆயிரத்து 55 பேர் பூரண குணமடைந்து மகிழ்ச்சியுடன் தங்களது வீடு திரும்புள்ளனர்.

இதில், அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 257 பேரும், கோவையில் 670 பேரும், செங்கல்பட்டில் 349 பேரும் அடங்குவர். ஆகமொத்தம், இதுவரை 6 லட்சத்து 22 ஆயிரத்து 458 பேர் குணம் அடைந்து உள்ளனர். மேலும், 41 ஆயிரத்து 872 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like