சூப்பர் திட்டம்..! ரூ. 35 லட்சம் வரை அள்ளித்தரும் திட்டம் பற்றி தெரியுமா ?

இந்திய அஞ்சல் துறையில் அனைவருக்கும் ஏற்றவிதமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக மூத்த குடிமக்கள் திட்டம், மகளிருக்கான சேமிப்பு திட்டம், விபத்து காப்பீட்டு திட்டம் என பல்வேறு விதமான திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் உள்ளது. அந்த வகையில் கிராமப்புற மக்களுக்காக கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அஞ்சல் அலுவலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரபலமான கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டமாக தபால் அலுவலகத்தில் துவங்கப்பட்டது கிராம சுரக்ஷா யோஜனா. கிராமப்புற மக்களுக்கு பிரத்யேகமாக செய்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் தினந்தோறும் ரூ. 50 டெபாசிட் செய்தால் போது. முதிர்வுக்கு பின் ரூ. 35,00,000 தொகையினை முதலீட்டாளர்கள் பெறலாம்.
19 வயது முதல் 55 வயது வரை உள்ள எவர் வேண்டுமானாலும் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சமாக ரூ.10,000 ,மற்றும் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் இந்த திட்டத்திற்கு வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் இந்த திட்டத்த்தில் பிரீமியத்தை முதலீடு செய்யலாம்.
இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் தினந்தோறும் ரூ. 50 என்ற அளவில் மாதந்தோறும் 1,500 ரூபாய் ஒருவர் டெபாசிட் செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும் போது முதிர்ச்சிக்கு பின் ரூ. 35 லட்சம் வரை முதலீட்டாளர்களுக்கு திரும்ப கிடைக்கும். மேலும், பிரீமியமாக ரூ.1,515 மாதந்தோறும் 55 ஆண்டுகளுக்கும் மற்றும் 58 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,463 செலுத்த வேண்டும்.
மேலும், 60 ஆண்டுகளுக்கு பிரீமியமாக ரூ. 1,411 தொகையை மாதாந்தோறும் செலுத்த வேண்டும். கிராம் சுரக்ஷா யோஜனா துவங்கிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம். அத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெறும் வசதியும் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு போனஸும் பெறலாம். இந்த திட்டத்தில் முதலீட்டாளர் 80 வயதை நிறைவு செய்யும் போது, ரூ. 35 லட்சம் முதிர்வு தொகை ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.