1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் சலுகை! ஏடிஎம் கார்டு இருந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!!

சூப்பர் சலுகை! ஏடிஎம் கார்டு இருந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!!


எஸ்பிஐ ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கணக்கு வைத்திருக்கும் பலருக்கு வங்கி தரும் சலுகைகள் குறித்து தெரிவதில்லை. வாடிக்கையாளர்களின் நலனுக்காக இவ்வங்கி நிறைய சலுகைகளை வழங்கிவருகிறது.

அதில் மிக முக்கியமான சலுகைதான் ரூ.2 லட்சம் காப்பீடு. எஸ்பிஐ கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் நாமினிக்கு ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படுகிறது. இது இறப்புச் சலுகை

2018 ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு முன்னர் இவ்வங்கியில் கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும். அதைத் தாண்டி கணக்கு தொடங்கியவர்களுக்கு மட்டுமே ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

சூப்பர் சலுகை! ஏடிஎம் கார்டு இருந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!!

எஸ்பிஐ ரூபே ஜன் தன் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஜன் தன் கணக்கு தொடங்கியிருக்க வேண்டும்.

இந்த வாடிக்கையாளர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்து வாங்கியிருக்க வேண்டும். ரூபே கார்டு இல்லாவிட்டாலும் இப்போது விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு ரூ.2 லட்சம் காப்பீட்டு வசதியைப் பெறமுடியும்.

சூப்பர் சலுகை! ஏடிஎம் கார்டு இருந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!!

ஜன் தன் யோஜனா என்பது மத்திய மோடி அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10,000 வரையில் ஓவர் டிராஃப்ட் உள்ளிட்ட நிறைய சலுகைகள் உள்ளன. ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடும் இதில் கிடைக்கிறது.

எஸ்பிஐ ரூபே கார்டு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தால்தான் விபத்து காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறமுடியும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like