நாளை முதல் ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை..! அப்போ அவசர வழக்குகளை தாக்கல் செய்தால் ..?

சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை ஐகோர்ட்டுகளுக்கு வரும் மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை தாக்கல் செய்தால் விசாரிப்பதற்கு வசதியாக விடுமுறை கால நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை என இரு உயர் நீதிமன்றங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள் கிழமை மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய நாட்களில் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.