நீதிமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து !! 3 மணி நேரமாக போராடி தீ அணைப்பு..
![நீதிமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து !! 3 மணி நேரமாக போராடி தீ அணைப்பு..](https://newstm.in/static/c1e/client/106785/migrated/457c9a523132fb6833c2c467b27c25cc.webp?width=836&height=470&resizemode=4)
டெல்லி மாவட்ட நீதிமன்ற 3வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ச்சியாக அருகிலுள்ள மக்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து , 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன.
3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறிப்பாக இந்த தீ விபத்தில் 3வது மாடியில் இருந்த நீதிமன்ற கோப்புகள் மற்றும் பல்வேறு விதமான ஆவணங்கள் முழுமையாக எரிந்து சாம்பல் ஆனதாக தெரிகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
Newstm.in