ஞாயிறன்று புறநகர் ரயில் சேவை ரத்து..!

நாளை மறுநாள் ஞாயிறன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக, தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.