1. Home
  2. தமிழ்நாடு

தலையில் கல்லைப்போட்டு மாணவர் கொலை.. விசாரணையில் வெளியானது ‘பகீர்’ தகவல்..!

தலையில் கல்லைப்போட்டு மாணவர் கொலை.. விசாரணையில் வெளியானது ‘பகீர்’ தகவல்..!


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அரியலூரில் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

அவ்வப்போது, தாத்தா - பாட்டியை பார்க்க பொற்பொதிந்தநல்லூர் கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம். தற்போது 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு தாத்தா - பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

இரவு, வீட்டின் முன் பகுதியில் படுத்து தூங்கிய மணிகண்டன் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தா.பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மணிகண்டன் தங்கி படித்த விடுதியில் 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர், 9-ம் வகுப்பு மாணவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதைப் பார்த்த மணிகண்டன், வார்டனிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதன் காரணமாக இந்தக் கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவரை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like