1. Home
  2. தமிழ்நாடு

ஒரு பக்கம் போராட்டம், வன்முறை.. மறுபக்கம் ஒரு லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம் !!

ஒரு பக்கம் போராட்டம், வன்முறை.. மறுபக்கம் ஒரு லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம் !!


முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டம், கடந்த 14ஆம் தேதி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாள் முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. ரயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கான தகுதிகள், விதிகள், நிபந்தனைகள் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்பு ராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, பொதுப்பணி, தொழில்நுட்பம் (விமான போக்குவரத்து, வெடிபொருள் பரிசோதகர்) கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவினருக்கான முன்பதிவு ஜூலையில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல விமானப்படையில் சேருவதற்கான ஆட்சேர்க்கை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு பக்கம் போராட்டம், வன்முறை.. மறுபக்கம் ஒரு லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம் !!

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 24 முதல் பெறப்படுகின்றன. முதல் நாளில் 3,800 வீரர்கள் விண்ணப்பித்தனர். இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சோ்வதற்கு கடந்த 4 நாள்களில் 94,000 போ் விண்ணப்பித்துள்ளனா். இந்த தகவலை இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https:careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

ஒரு பக்கம் போராட்டம், வன்முறை.. மறுபக்கம் ஒரு லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம் !!

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டவா்கள், அக்னிபத் திட்டத்தில் சோ்த்துக் கொள்ளப்பட மாட்டாா்கள் என்று முப்படைகளும் திட்டவட்டமாக கூறியுள்ளன. தாங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என சான்று தர வேண்டுமெனவும், தோ்வா்கள் குறித்து காவலர்களிடம்ட சரிபாா்ப்பு நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like