1. Home
  2. தமிழ்நாடு

செல்போன் பயன்படுத்தியதால் கண்டிப்பு… மாணவி எடுத்த விபரீத முடிவு!!

செல்போன் பயன்படுத்தியதால் கண்டிப்பு… மாணவி எடுத்த விபரீத முடிவு!!


செல்போன் பயன்படுத்தியதைப் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் காசிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி – முருகேஸ்வரி தம்பதியின் மகள் சுதா . இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சுதா அடிக்கடி வீட்டில் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சுதா மீண்டும் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் கண்டித்து விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

செல்போன் பயன்படுத்தியதால் கண்டிப்பு… மாணவி எடுத்த விபரீத முடிவு!!

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சுதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பயன்படுத்தியதைப் பெற்றோர்கள் கண்டித்தால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like