1. Home
  2. தமிழ்நாடு

நாளை பங்குச்சந்தைகளுக்கு அரைநாள் விடுமுறை..!

1

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை 22-ம் தேதி நடைபெற உள்ளது.  இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 22-ம் தேதியன்று பங்குச் சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

22-ம் தேதி அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் நேற்று (சனிக்கிழமை) பங்குச் சந்தைகள்  காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும்  வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Trending News

Latest News

You May Like