கோடை ஜாக்பாட் - 20 முறை இலவச பயணம் - அரசு போக்குவரத்து கழகம்..!

கோடைகாலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஆண்டு முழுவதும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"01.04.2025 முதல் 15.06.2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து கீழ்கண்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு - 25 நபர்கள் - தமிழ்காடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்துக்கு 20 முறை இலவச பயணம் (O.07.2025 முதல் 30.06.2026 வரை)
இரண்டாம் பரிசு - 25 நபர்கள் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருத்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்தில் 10 முறை இலவச பயணம் (01.07.2025 முதல் 30.08.2026 வரை)
மூன்றாம் பரிசு - 25 நபர்கள் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ளஅனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து 05 முறை இலவச பயணம் (01.07.2025 முதல் 30.06.2026 வரை)
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுங்கள். நீங்களும் போட்டியின் வெற்றியாளர்களில் ஒருவராக இருக்கலாம்! முன்பதிவு செய்ய: www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தவும்." என கூறப்பட்டுள்ளது.