பயணிகளுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..! அலறிய பயணிகள்
சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு இன்று காலை பேருந்து ஒன்று சென்னைக்கு வந்துள்ளது. அந்த பேருந்து மதுரவாயல் பைபாஸில் வரும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. அந்த பேருந்து தலைகீழாகக் கவிழாமல், நேராக விழுந்ததால் பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். தகவல் அறிந்து அங்குச் சென்ற போலீசார், பயணிகளைப் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தை ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் மேலே தூக்கப்பட்டது.
newstm.in