பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலினின் 3 கேள்விகள்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருப்பது., பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து விட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்று தான்.
1. தமிழகம் ஒரு ரூபாய் வரியாக தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பி தருவது ஏன்?
2. 2 இயற்கை பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பா.ஜ.க., ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத்திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசை திருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர். பதில் சொல்லுங்க பிரதமர் மோடி.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.