1. Home
  2. தமிழ்நாடு

வரும் 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன் : முதல்வர் ஸ்டாலின்..!

1

மத்திய அரசி்ன் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் உள்ளார். பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். அந்த வகையில், நிதி ஆயோக்கின் இந்தாண்டுக்கான கூட்டம் மே 24-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார். இதற்காக அவர் மே 23- ம் தேதி மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு 24-ம் தேதி கூட்டத்தை முடித்துவிட்டு, அன்று மாலையே சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. கூட்டத்தில், தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களின்கீழ் நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க பிரதமரிடம் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.


இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளவது,

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்! 

சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

"பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?

இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.

கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! 


 

Trending News

Latest News

You May Like