1. Home
  2. தமிழ்நாடு

முதல்முறை இந்தியா வந்த இலங்கை அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

Q

இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே அமோக வெற்றி பெற்றார். ஏ.கே.டி. என்று அந்நாட்டு அரசியலில் அழைக்கப்படும் அவரின் வெற்றியை மக்கள் உற்சாக கொண்டாடினர்.

தேர்தலில் வென்று அதிபரான அவர், முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். 2 நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள அவரை, நேற்றிரவு மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

இந்நிலையில், இன்று (டிச.,16) டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடியை இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே சந்தித்து பேச உள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like