1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும்

1

பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.  அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக  குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.

எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

ஞாயிறுக்கிழமை - எலுமிச்சை சாதம்

திங்கட்கிழமை - தேங்காய் சாதம்

செவ்வாய், புதன்கிழமை - தக்காளி, கீரை சாதம்

வியாழன், வெள்ளிக்கிழமை - பொங்கல் சாதம்

சனிக்கிழமை - புளியோதரை.

தானங்களும் அதன் பலன்களும்:

1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்

2. பூமி தானம் - இகபரசுகங்கள்

3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி

4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்

6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி

7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்

8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்

9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்

10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்

11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்

12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி

13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி

14. பால் தானம் - சவுபாக்கியம்

15. சந்தனக்கட்டை தானம் - புகழ்

16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.

Trending News

Latest News

You May Like