ஆன்மீகம் அறிவோம் : ஏலக்காயை இப்படி பயன்படுத்தினால் வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்..!

ஏலக்காயை பயன்படுத்தும் முறை :
1. பணத்தை அதிகரிக்க ஏலக்காய்:
பணத்தை அதிகரிக்க ஐந்து ஏலக்காயை பர்ஸில் வைக்க ஏலக்காய் சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ளது. இந்த கிரகங்கள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை தருபவை. ஏலக்காயை பர்ஸில் வைத்தால் கெட்ட சக்தி விலகி, பணம் வந்து கொண்டே இருக்கும். இது வியாபாரிகள் மற்றும் சம்பளம் வாங்குபவர்களுக்கு மிகவும் நல்லது.
2. ஏலக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் குளியல்:
உங்களுடைய பொருளாதார நிலை மற்றும் காதல் வாழ்க்கையை மேம்படுத்த, இரண்டு ஏலக்காய் மற்றும் கொஞ்சம் ரோஸ் வாட்டரை குளிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். இப்படி செய்தால் சுக்கிரன் கிரகம் வலுப்பெறும். இதன் மூலம் பணம் மற்றும் காதல் உங்களை தேடி வரும் என்பது நம்பிக்கை.
3. பச்சை நிற பையில் ஏலக்காய்:
முக்கியமான சந்திப்புகள் அல்லது நேர்காணலுக்கு போகும் போது, மூன்று ஏலக்காயை பச்சை நிற துணியில் கட்டி எடுத்து செல்லுங்கள். பச்சை நிறம் புதன் கிரகத்தை குறிக்கிறது. இது தைரியத்தை கொடுக்கும், பேச்சு திறமையை அதிகரிக்கும். இதனால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஏலக்காய் சமையலுக்கும், உடல் நலத்திற்கும் மட்டும் இல்லாமல், அதிர்ஷ்டத்தையும் தரும்.
4. குழந்தைகளுக்கு ஏலக்காய் பால்:
குழந்தைகளுக்கு இரவில் தூங்கும் முன் ஏலக்காய் கலந்த பால் கொடுக்கவும். பாலில் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காய் போட்டு கொடுத்தால், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். நன்றாக படித்து வாழ்க்கையில் ஜெயிப்பார்கள். இது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உதவும், கவனத்தை அதிகரிக்கும், தேர்வில் வெற்றி பெற வைக்கும்.
இந்த எளிய பரிகாரங்களை பின்பற்றி வாழ்க்கையில் வளம் பெறலாம். ஏலக்காய் ஒரு சிறிய பொருள் தான், ஆனால் அதன் பயன்கள் ஏராளம். இதனை முறையாக பயன்படுத்தினால் அளவில்லாத நன்மைகளை பெறலாம். ஏலக்காயை பூஜை அறையில் வைப்பதாலும், ஒரு சிறிய துணியில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விடுவதாலும், பணம் வைக்கும் இடங்களிலும் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.