1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : சனியனே என திட்டினால் ஆபத்து வரும்..!

1

 உங்கள் பிள்ளைகளையோ, வேறு யாரையும் திட்ட வேண்டாம். திட்டினால் அதனால் ஆபத்து உங்களுக்குத் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சனியனே என திட்டுவதால் சனி பகவான் கோபமடைந்து அப்படி திட்டுபவர் மீது தன் முழு பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்.

சனி பகவான் ஒரு மந்தமான கடவுள் என்பதால் அவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு. அதனால் இவர் மற்ற கிரகங்களை விட சூரியனை மிகவும் மெதுவாக சுற்றி வருகிறார்.சனி பகவான் மிகவும் நல்லவர் தான், இருப்பினும் யார் ஒருவர் தன் எண்ணத்தில் சனியன் என வந்துவிட்டால், அவர் வார்த்தையில் அப்படி சனியனே என வந்துவிடும். அப்படி சனியனே என திட்டுவது மிகவும் ஆபத்தானது.

அப்படி திட்டுவதால் நன்றாக இருக்கும் வாழ்க்கையில் கூட பல சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும். அதன் பின் வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போல தான்.


பொதுவாக எந்த கிரகமும் முழுவதுமாக நன்மையோ அல்லது முழுவதும் கெடுதலோ செய்யாது என்கிறது ஜோதிட விதி. ஆனால் சனி பகவானைப் பார்த்தாலோ அல்லது சனி பெயர்ச்சி என்றாலோ உடனே பலரும் பதறுகின்றனர். காரணம் அவர் தீங்கு மட்டும் செய்வார் என நினைப்பதால் தான். சனி பகவான் நீதி தேவன். இவர் யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் நல்லது செய்ததற்கும் நன்மையும், கெட்டதற்கும் ஏற்ற கெடுபலனும் தரக்கூடியவர்.

இருப்பினும் அவர் தரக்கூடிய அற்புதமான நற்பலனை நினைத்து மகிழாமல். தீமையை மட்டும் கண்டு மக்கள் பயப்படுகின்றனர். அதனால் அவருக்கு கெட்ட பெயரே மிஞ்சியது.

திருக்கொள்ளிக்காடு அற்புத பலன் தரும் சனி :
தனக்கு ஏற்படும் கெட்ட பெயரை நினைத்து வருந்திய சனி பகவான் திருக்கொள்ளிக்காடு வந்து சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவர் முன் தோன்றிய சிவனை பொங்கு சனியாக மாற்றினார். இங்கு அக்னீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.

சனி பகவான் மந்தகதியாக இருப்பது இயற்கையின் விதி. அதனால் சூரியனை சுற்றுவது கூட மெதுவாகத் தான் நிகழ்கிறது. வீட்டில் குழந்தை சரியாக படிக்கவில்லை என்றாலோ, சோம்பலாகவே இருக்கிறது என்றாலோ ஏன் மந்தமாக இருக்கிறாய் என்று தான் கேட்பதுண்டு.அப்படி மந்தகதி உள்ளவர்களுக்காகச் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யலாம்.

குழந்தை என்ன சேஷ்டை செய்தாலும் அவர்களை சனியன் என்று மட்டும் திட்ட வேண்டாம், அதனால் சனி பகவானின் கெடு பார்வை உங்கள் மீது விழ நேரிடும். மந்தகதி உள்ளவர்களைப் பக்குவமாகப் பேசி திருத்துபவர்களுக்கு சனியின் அருள் கிடைக்கும்.


திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்
புராண பெயர்(கள்): திருக்கொள்ளிக்காடு
பெயர்: திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்

அமைவிடம்
ஊர்: கள்ளிக்காடு
மாவட்டம்: திருவாரூர்

கோயில் தகவல்கள்
மூலவர்: அக்கினீசுவரர்
தாயார்: மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை
தல விருட்சம்: வன்னி, வில்வம்
தீர்த்தம்: அக்கினித் தீர்த்தம், தீர்த்தக் குளம்

Trending News

Latest News

You May Like