ஆன்மீகம் அறிவோம் : தோஷங்களை நிவர்த்தி செய்யும் பிள்ளையார் காயத்ரி மந்திரம்..!
விநாயகரை தொழுவதன் பலனாக சனி தோஷம் முதல் ஜாதகத்தில் உள்ள பல விதமான தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி. அந்த வகையில் தினமும் வினாயகரை வணங்குகையில் கூற வேண்டிய பிள்ளையார் காயத்ரி மந்திரம் இதோ.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்:
பொருள்:
கடவுள்களில் முதன்மையானவரும், உடைந்த தந்ததையும் கொண்டவரே உங்களை நான் வணங்குகிறேன். யானை முகத்தானே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள்.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக நம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி மிக சிறந்த பலன்களை பெறலாம். அதோடு நமது தோஷங்கள் விலகி எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம்.