ஆன்மீகம் அறிவோம் : இந்த 5 பொருட்களை தானம் செய்தால் அதிர்ஷ்டம் பெருகும்..!

செவ்வாய் கிழமையில் குறிப்பிட்ட 5 பொருட்களை தானம் செய்வதால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்என்பது நம்பிக்கை.
1. செவ்வாய்க்கிழமையன்று சிவப்பு நிற பொருட்களை தானம் செய்யுங்கள். சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்வது நல்ல பலன்களைத் தரும். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். குறிப்பாக செவ்வாய்க்கிழமையன்று சிவப்பு நிற ஆடை தானம் செய்வதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
2. செவ்வாய்க்கிழமை அன்று கடலை மாவு லட்டு தானம் செய்யுங்கள். ஹனுமனுக்கு கடலை மாவு லட்டு மிகவும் பிடிக்கும். செவ்வாய்க்கிழமை அன்று கடலை மாவு லட்டு தானம் செய்வது நல்லது.
3. செவ்வாய்க்கிழமை அன்று மசூர் பருப்பு தானம் செய்யுங்கள். மசூர் பருப்பு தானம் செய்வதால் மாங்கல்ய தோஷம் நீங்கும். திருமணத்தில் ஏற்படும் தடைகள் விலகும். இதனால் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
4. செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் தானம் செய்யுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் தானம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனால் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். வெல்லம் தானம் செய்வதும் நல்லது. செவ்வாய்க்கிழமை அன்று தேங்காயுடன் சிவப்பு பூ வைத்து கோவிலுக்கு தானம் செய்ய வேண்டும்.
5. செவ்வாய்க்கிழமை அன்று கஞ்சி அல்லது அரிசி தானம் செய்யுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று பொருளாதார நெருக்கடியை போக்க தானம் செய்வது அவசியம். செவ்வாய்க்கிழமை அன்று கஞ்சி மற்றும் அரிசி தானம் செய்வது நல்லது. இப்படிச் செய்வதால் பொருளாதார நிலை மேம்படும். வறுமையை போக்க இந்த தானம் உதவும்.
செவ்வாய்கிழமையில் வரும் செவ்வாய் ஹோரையில் இந்த 5 பொருட்களையும் தானம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். அதே போல் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிப்பவர்களும் செவ்வாய்கிழமையில் வரும் செவ்வாய் ஹோரையில் கடனில் சிற தொகையை திருப்பி செலுத்தலாம் அல்லது கடனை திருப்பி செலுத்துவதற்காக சிறு தொகையை தனியாக எடுத்து வைக்கலாம். இதனால் மனிதர்களிடம் வாங்கிய கடனாக இருந்தாலும், வங்கியில் வாங்கிய கடனாக இருந்தாலும் விரைவில் அடைக்க முடியும். அதற்கான பண வரவு கிடைக்கும்.