ஆன்மீகம் அறிவோம் : ஓம் மந்திரத்தை தினமும் உச்சரித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் "ஒம்", "ஓம்", "ஓம்" என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும். எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். அதிகாலை நேரத்தில் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது ஆகும்.
உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் முன் அமர்ந்து ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் "ஓம்" என எழுதினால், அவர்களின் கல்வியில் உயர்வு ஏற்படும். சுத்தமான பசுஞ்சாண விபூதியில் "ஓம்" என எழுதி, அதை தினமும் நெற்றியில் இட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும். பிறரை ஆசிர்வாதிக்கும்போது "ஓம்" என்னும் மின்சக்தி தான், நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது. பிறரின் குறைகளை நீக்குகின்றன.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் "ஒம்"என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும். அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். கர்ப்பமான தாய்மார்கள் "ஒம்" என சதா காலமும் ஜபித்து வந்தால் தெய்வக் குழந்தைகள் பிறக்கும். மூச்சை உள்ளே இழுக்கும் போது "ஓம்" என ஜெபிக்கலாம். அப்படி ஜெபிக்கும் போது மூச்சை உள்ளே இழுப்பதும்,வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது.