1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!

1

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை . இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு முன்பதிவு ரயில் அறிவித்துள்ளது. அதாவது, இன்று மற்றும் 14ம் தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படுகிறது சிறப்பு ரயில்.  

நாளை மற்றும் வரும் 17ம் தேதி மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு பகல் 1.20 மணிக்கு புறப்படுகிறது 

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி,திருநெல்வேலி  வழியாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like