1. Home
  2. தமிழ்நாடு

மாமனார் மாமியாரை பார்த்துக்கொள்ள சிறப்பு விடுமுறை..!

1

அசாம் அரசு தங்களுடைய பணியாளர் தங்களது பெற்றோர் அல்லது மாமியார் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக வருகிற நவம்பர் மாதம் 2 நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நடப்பாண்டில் வரும் நவம்பர் 6ம் தேதி மற்றும் 8ம் தேதி உள்ளிட்ட 2 நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விடுப்பு தனிப்பட்ட சொந்த காரியத்துக்காக இருக்க கூடாது என்றும் மாநில அரசு ஊழியர்கள் அவர்களின் பெற்றோர் அல்லது மாமனார்- மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்கான சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் அல்லது மாமனார்- மாமியாரை கவுரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிக்கவும் தான் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like