சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

வருகிற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருவதால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகவே விடுமுறை போன்ற நாட்களில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளானது இயக்கப்படும். அதேபோல் இந்த வார விடுமுறையில் பயணிகளிடையே கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பிப்ரவரி 14-ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல் பிப்ரவரி 15ஆம் தேி கிளாம்பக்கத்தில் இருந்து 240, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. தொலை தூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.