கேரளாவில் மே 27ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்..!

தென்மேற்கு மழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் எப்போது தொடங்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி,தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் மே 27 இல் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 31ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கக்கூடிய பருவம் மழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. நாடு முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்றும் இருப்பினும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.