சென்னை மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருநெல்வேலியிலிருந்து சென்னை வரை வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் திருநெல்வேலி - சென்னை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06070), ஜூலை 4 முதல் ஜூலை 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்வழித்தடத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் சென்னை - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06069), ஜூலை 5 முதல் ஜூலை 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06030), ஜூலை 7 முதல் ஜூலை 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்வழித்தடத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமை மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ.எண் 06029), ஜூலை 8 முதல் ஜூலை 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.