1. Home
  2. தமிழ்நாடு

திடீரென ஜெய்ப்பூர் செல்லும் சோனியா காந்தி..!

1

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை ஜெய்ப்பூரிலேயே சோனியா காந்தி தங்கியிருப்பார் எனவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மருத்துவர்கள் அறிவுறுத்தலை ஏற்று சோனியா காந்தி ஜெய்ப்பூருக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை அக்கட்சி வகுத்து வருகிறது. அனல் பறக்கும் பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், சோனியா காந்தி ஜெய்ப்பூரில் தங்க இருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்தும் பெற்றுள்ளது.

Trending News

Latest News

You May Like